நிச்சயம் அது
நிச்சயம் அது.
"நான் நிரந்தரம்"
என்று
நினைத்தாயானால்,
நிம்மதி இழப்பாய்,
நிச்சயம் அது.
"இறைவன் நிரந்தரம்"
என்று
நினைத்தாயானால்,
நிம்மதி அடைவாய்,
நிச்சயம் அது.
"நான் நிரந்தரமற்றவன்"
என்று
நினைத்தாயானால்,
உலகம் உய்யும்,
நிச்சயம் அது.
" இறைவன்
நிரந்தரமற்றவன்'
என்று
நினைத்தாயானால்,
உலகம் அழியும்,
நிச்சயம் அது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.