நிச்சயம் அது

நிச்சயம் அது.

"நான் நிரந்தரம்"
என்று
நினைத்தாயானால்,
நிம்மதி இழப்பாய்,
நிச்சயம் அது.

"இறைவன் நிரந்தரம்"
என்று
நினைத்தாயானால்,
நிம்மதி அடைவாய்,
நிச்சயம் அது.

"நான் நிரந்தரமற்றவன்"
என்று
நினைத்தாயானால்,
உலகம் உய்யும்,
நிச்சயம் அது.


" இறைவன்
நிரந்தரமற்றவன்'
என்று
நினைத்தாயானால்,
உலகம் அழியும்,
நிச்சயம் அது.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (24-Sep-21, 5:04 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : nichayam athu
பார்வை : 74

மேலே