கோதுமை அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கோதுமையின் நற்குணந்தான் கோதிற் பலங்கொடுக்குந்
தாதுவிர்த்தி யாக்குந் தனிவாய்வைச் - சேதிக்கும்
பித்தம் அளிக்கும் பிரமேகத் தைக்கெடுக்கும்
உத்தமமாம் என்றே உரை

- பதார்த்த குண சிந்தாமணி

இது நல்ல பலம், சுக்கிலம், பித்தம் இவற்றை விரிவாக்கும்; வாதம், பிரமேகம், இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-21, 7:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே