வெள்ளாமணக்கு இலை - நேரிசை வெண்பா
வெள்ளாமணக்கு இலை
நேரிசை வெண்பா
மந்தங் கதித்தெழுந்த வாதம் மருமவலி
பந்தமல (மி)யாவும் பறக்குங்காண் - சந்ததமும்
பூமணக்கு நெய்த்த புரிகுழன்மா தேவெள்ளை
யாமணக்குப் பத்திரியால் ஆய்
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் அக்கினி மந்தம், வாதவலி, மார்பு நோய், மலக்கட்டு இவை நீங்கும்