கனவும் நியமும்

கனவும் நியமும்

ஏதோ கனவு கண்டேன்,
எங்கெல்லாம் சென்றிருந்தேன்,
எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தேன்,
கண்விழித்து பார்க்கையிலே!

என் வீட்டுக் குடிசையிலே,
என் மனைவி நிற்கக் கண்டேன்,
என்னவள் அணிந்த
சேலை கண்டேன்,
தரையில் துயிலும் என்
செல்வங்கள் கண்டேன்.

முருகா,
என்று தொலையும்
என் பணத் தாகம், என்று கேட்டு
வேலை சென்றேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Oct-21, 10:54 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 97

மேலே