அபிநயம்

அயிரமீனு கண்ணழகி
முல்லைத்தீவு பெண்ணழகி

மண்ணில் பிறந்த மண்அழகி
பொன்னே வியக்கும் பொன்னழகி

காதலத்தான் சொல்ல வந்தேன்
பக்கத்துல நிக்கறியே//

கண்ணால பாத்ததுக்கே
வெட்கத்தில சொக்குறியே

சொல்லவந்த என்ன நீயும்
துக்கத்தில வைக்கிறியே

தினந்தோறும் கனவில் வந்து தூக்கத்தில தைக்குறியே

கழுத்திலே நகபோட்ட
கண்டாங்கி சேலைக்காரி

கண்ணாலே கல்லை எல்லாம்
வேகவைக்கும் சூலை காரி

உன்னழகு என்னையும்
கிறங்கத்தான் வைக்குதடி//

ஒரு மணி வெயிலிலும் உறங்கத்தான் வைக்குதடி

உம்முகமும் முழுநெலவாய்
ஜொலிக்குதடி மண்ணில்

மின்னலாட்டம் உன் பின்னல் ஒளிக்குதடி கண்ணில்

எனக்காகப் பொறந்தவளே
நல்லசேதி சொல்லேண்டி//

இல்லைனா கண்ணாலே
என் உயிரை கொல்லேண்டி

அயிரமீனுக் கண்ணுக்காரி
ஆளையே மயக்குறியே//

உன் அழகால் அனைவருக்கும் நன்மை தான் பயக்குறியே

மாமன்மனசப் புரிஞ்சிகிட்டு
வயசுந்தான் ஆகுதடி

நீ பதில் ஒன்னும் சொல்லாம அண்ணான்னு சொல்லும்போது மனசு பூரா நோகுதடி

வஞ்சியே புரிஞ்சுக்கடி//
எத்தன நாளானாலும்
பொஞ்சாதி நீதாண்டி//

மாமன் மனசப் புரிஞ்சிக்கடி
மஞ்சக்கயித்த ஏத்துக்கடி//

பொன்னகையே வேணாம்டீ புன்னகையே
போதுமடி//

எழுதியவர் : புதுவை குமார் (11-Nov-21, 7:26 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 87

மேலே