இலந்தை சமூலம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வேருக்கா யாசம் விலகும் பசியுண்டாஞ்
சீரொத் திடுயிலைக்குச் சீழ்மூலஞ் - சோரிவிழல்
மேவெரிச்ச லுங்கடுப்பு மேகபித்த மும்போகுந்
தாவமதில் வாழுமிலந் தை
- பதார்த்த குண சிந்தாமணி
இலந்தை வேர், அயர்ச்சியை நீக்கும்; பசியை உண்டாக்கும்; இலை சீழ் மூலம், இரத்தக் கழிச்சல், உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் இவற்றை நீக்கும்