இலந்தை சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வேருக்கா யாசம் விலகும் பசியுண்டாஞ்
சீரொத் திடுயிலைக்குச் சீழ்மூலஞ் - சோரிவிழல்
மேவெரிச்ச லுங்கடுப்பு மேகபித்த மும்போகுந்
தாவமதில் வாழுமிலந் தை

- பதார்த்த குண சிந்தாமணி

இலந்தை வேர், அயர்ச்சியை நீக்கும்; பசியை உண்டாக்கும்; இலை சீழ் மூலம், இரத்தக் கழிச்சல், உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-21, 11:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே