இருவாட்சி மரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்ணொளிவு மெய்யிற் கமழ்மணமு நீடழகும்
நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் - பண்ணளியுங்
கங்குலும்வாழ் வார்குழலே காரமொடு வெப்புமிகத்
தங்குமிரு வாட்சிமரத் தால் –

பதார்த்த குண சிந்தாமணி

இருவாட்சி மரத்தால் உட்டிணமும், கார்ப்பு சுவையுமுள்ள இருவாட்சி கண்ணொளியும், உடம்பில் நல்ல மணமும், அழகும் உண்டாகும்; உடல்குத்தலும், மூர்ச்சையும் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-21, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே