சாதிமல்லி நீயென்றன் சகியே - வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(கூவிளங்காய் கூவிளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

ஆதிமுத லுன்றனை யறிந்தே
காதலிக்கும் நாயகன் கனியே!
காதலெனுஞ் சோலையிற் கலந்த
சாதிமல்லி நீயென்றன் சகியே!

– வ.க.கன்னியப்பன்

நான்கடிகளிலும் (கூவிளங்காய் கூவிளம் மா) என்ற சீரொழுங்கில் அமைந்த வஞ்சி விருத்தம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 11:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே