சாதிமல்லி நீயென்றன் சகியே - வஞ்சி விருத்தம்
வஞ்சி விருத்தம்
(கூவிளங்காய் கூவிளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
ஆதிமுத லுன்றனை யறிந்தே
காதலிக்கும் நாயகன் கனியே!
காதலெனுஞ் சோலையிற் கலந்த
சாதிமல்லி நீயென்றன் சகியே!
– வ.க.கன்னியப்பன்
நான்கடிகளிலும் (கூவிளங்காய் கூவிளம் மா) என்ற சீரொழுங்கில் அமைந்த வஞ்சி விருத்தம்!