மலர் மனமே

" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,
மலர்கள் தூவி பூஜை செய்தால்,
அம் மலர் போல் உன்னை
ஏந்திடுவாள்.

" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,

1. சரணம் என்றே சென்றடைந்தால்,
அபயம் தந்து காத்திடுவாள்.
மரணம் கூட வந்தாலுமே,
அரணாய் நின்று அதை
மாற்றிடுவாள்.

" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள்,

2. துன்ப மேகம் சூழும் நேரம்,
அன்னை அவளை சேர்ந்து விடு.
இன்ப ஒளியை தந்திடுவாள்,
உன்னை அன்பால்
தேற்றிடுவாள்."

" மலர்கள் விரும்பும் அன்னையவள்,
மலரே உருவாய் வந்த அவள், "

எழுதியவர் : (12-Dec-21, 10:08 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : malar maname
பார்வை : 575

மேலே