அம்மா

கருவாக்கி உருவாக்கி எனைநீயும் வளர்த்தவளே!
ஈரைந்து மாதங்கள் வயிற்றினுள்ளே வார்த்தவளே!

நான் அழும் சமயங்களில் என்னருகே இருந்தவளும் நீ,
நான் சிரிக்கும் சமயங்களில் அதைக்கண்டு ரசித்தவளும் நீ,

நான் தோற்கும் காலமெல்லாம் என்முன்னே நிற்பவளும் நீ,
நான் வெல்லும் காலமெல்லாம் என்பின்னே ஒளிபவளும் நீ,

நான் அறியா உலகினை எனை அறிய செய்தவளும் நீ,
என்னை உலகினிலே ஒளிபொருட்டாய் நிலைபெறச் செய்தவளும் நீ,

என்னை உலகறிய செய்த உன்னை உலகறிய செய்வேன் நான்
அவ்வாறு உன்னை உலகிற்கு உணர்த்தாமல் நான் இறக்கும் நிலை வந்தால்
"மீண்டும் பிறப்பெடுப்பேன் இப்பூவுலகில் உந்தன் மகனாக"

எழுதியவர் : கோகுல்ராஜ் கவி (கவி.கோ) (25-Dec-21, 4:43 pm)
சேர்த்தது : Gokulraj Kavi
Tanglish : amma
பார்வை : 1233

மேலே