காத்திருப்பேன்

காத்திருப்பேன்.

கதிரவன்
வீடு செல்லும்
வேளையிலே,
காத்திருப்பேன்
கண்ணகி அம்மன்
கோவிலிலே.

அவள் வருவாள்
தனியாக!
நடந்து செல்வோம்
இருவருமே,
வயல் வெளி
வரம்பினிலே.

பல விடயம்
பேசிடுவோம்,
பறவைகள்
கேட்டுச் செல்லும்,
நாரைகள்
நிமிர்ந்து பார்க்கும்.

இன்பம் பல தந்த
விடயம் அது,
இன்னும் அதை
நினைக்கையிலே!
இளமை திரும்பும்
எங்கள் மனதில்.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Dec-21, 8:09 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kaathirupen
பார்வை : 129

மேலே