இறுக்கியணைத் தொரும்மா

நேரிசை வெண்பா

அருகி யணைத்தலன்றி வாய்தெங்கின் நீரும்
திருக்குறள் காமம் இயம்பா -- தருவார்
இருநூற்று ஐம்பதில் காணின்பம் கொச்சை
இருப்பின் விளம்பிடு மிங்கு

திருக்குறளில் 250 குறள்களைக் காமத்துக்கு ஒதுக்கிய வள்ளுவன் கையாண்டஅதிக
பட்சமான காமவார்த்தை இறுக்கியணை, மடிமீதில் முத்த வாயமுது தவிற வேறில்லை.
இதைத்தான் மக்கள் சுமார் 2000 வருடமென்ன அதற்கும் முன்பிருந்தே காமத்தை
வள்ளுவர் எழுதினார் என்று இன்னும் புகழ்ந்து கொண்டே யிருக்கிறார்கள். . ஆகையால்
கிறுக்கலில் கொச்சை யெனும் கஞ்சாவைக் கலக்காதீர்கள்.

எழுதியவர் : பழநி இராஜன் (3-Jan-22, 10:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 104

மேலே