முட்டில் பெரும்பொருள் தக்குழி ஈதல் இனிது - இனியவை நாற்பது 19

இன்னிசை வெண்பா

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது. 19

- இனியவை நாற்பது

பொருளுரை:

தன்னிடம் நட்புக்கொண்டவர்களைப் பற்றிப் புறங்கூறாதவனாய் வாழ்வது மிக இனியது.

சத்தியத்தைப் பேணிப் பாதுகாத்து யாவர்க்கும் பணிவுடன் நடப்பது அதைவிட இனியது.

குறையில்லாத பெரும் பொருளைத் தேடிச் சம்பாதித்தால் அப்பொருளைத் தகுதி வாய்ந்த தேவையுள்ளோர்க்கு கொடுத்து உதவுவது இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-22, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே