காட்டுள்ளிக் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நஞ்சோடு சீதகபம் நாடாதி ரைப்புமறும்
பஞ்சாக மூல பகந்தரம்போம் - பஞ்சணைசேர்
வீட்டுள் ளிருக்கும் வினோத மடமயிலே
காட்டுள் ளிகிழங்கைக் கண்டு

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் பாம்பின் விடம், சீதளத்தால் ஏற்பட்ட கோழை, சுவாசம், மூலகப நோய் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே