குறுங்கவிதை
குறுங்கவிதை
1.
ஒழுகிசை அகவல் ஓசை
உடைய நேரிசை ஆசிரியப்பா
நினைத்த நினைப்பை எழுத்தில் வடிக்க
நேரிசை ஆசிரி யப்பா நான்கு
சீரில் செப்பல் தூங்கிசை ஒழுகிசை
மூன்று விதமாய் இருக்க எதற்கோ.
கண்ட படிகிறுக் கியவர்
கவிதை என்கிறார் உரைநடை யையே
2.
.
ஒழுகிசை அகவல் ஓசை
உடைய நேரிசை ஆசிரியப்பா
பதினொரு சீரில் ஆசிரி யப்பா
விதியதைப் புரியா நீயுமே
சதியாய் பாட்டென கவிதை யாகுமோ
3.
நேரிசை ஆசிரியப்பா
அப்படி விரைவெ தற்காம் சொல்லு
தம்படிக் குதவா பாட்டை
சும்மா நீகிறுக் குவதென் கூறே
....