காதல் வானிலே

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

💟💟💟💟💟💟💟💟💟💟💟

என்னவளே!
வாடிய மலரிலும்
நான்
வாசம் காண்பேன்
அது
உன் கூந்தலிலிருந்து
உதிர்ந்ததாக இருந்தால்.... !

காகிதம் கூட
எனக்கு பொக்கிஷம் ஆகும் ...
அதில்
உன் கையெழுத்து
இருந்தால் ......!

ஒரு காலடி கூட
எனக்கு
ஒரு கோடி
கவிதைகளைக் கொடுக்கும் ...
அது
உன்னுடையக்
காலடியாக இருந்தால்..... !

வலிகள் கூட
எனக்கு
வார்த்தைகளால்
சொல்ல முடியாத
சுகத்தை கொடுக்கும்...
அது
உன்னால்
வந்ததாக இருந்தால் .....!

எந்த இடமும்
எனக்கு சொர்க்கமாகும்....
நீ என் பக்கத்தில்
இருந்தால்...... !

உப்பில்லாத
உணவு கூட
என் நாவிற்கு
அமுதமாகும்
நீ சமைத்ததாக இருந்தால் .....!

குடிசை வீடாக
இருந்தாலும்
அது
எனக்கு
மாளிகைதான்
உன்னோடு இருந்தால்....!

துன்பம்
இல்லாமலேயே
நான் வாழ்ந்து விடுவேன்....
நீ மட்டும்
எனக்கு
வாழ்க்கைத்
துணையாக வந்தால்.....!


*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (8-Feb-22, 11:12 pm)
Tanglish : kaadhal vaanile
பார்வை : 83

மேலே