எவையெல்லாம் கற்றவர்க்குரிய ஒழுக்கம் – அறநெறிச்சாரம் 71

நேரிசை வெண்பா

தேசுந் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை - ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி. 71

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

கீர்த்தியும், நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய் மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து மனத்தில் குற்றமில்லாமல் மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், தனது கடமையை அறிதலும், கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-22, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே