பெண்ணின் பெருமை
பெண்களை கண்களாக
மதித்து வாழ வேண்டும்
என்ற கருத்துக்கு எல்லோரும்
மதிப்பளித்து வருகின்றார்கள்...!!
பெண்களை
காம பார்வையுடன்
கற்பழிக்கும் ஆண்களையும்
பாலியல் கொடுமை
புரிப்பவர்களையும்
சமுதாயத்தில் புறக்கணிப்போம்..!!
நாங்கள் புதுமைப்பெண்கள்
என்று சொல்லி இன்று
பல இடங்களில் ஆண்கள்
தங்களுக்கு கொடுக்கும்
மதிப்பையும் மரியாதையும்
சில பெண்கள் எல்லை மீறிய
சுதந்திர உணர்வுடன் தவறாக
பயன்படுத்தி விட்டு
பிறகு வருத்தம் கொள்கிறார்கள்...!!
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால் அறிவி லோங்கி
வையம் தழைக்கும் என்ற
பாரதியாரின் பாடலை
உலக மகளிர் தினத்தில்
நினைவில் கொள்வோம்....!!
பெண்ணின் பெருமையை போற்றி
பாரதத்தின் பண்பாட்டை காப்போம்
பெண்கள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!
--கோவை சுபா