குருவியின் வருத்தம்

குருவியின் வருத்தம்

தினம் தினம்
இந்த காளை
மாட்டின் முதுகில்
அமரும் குருவிக்கு

இன்று
மாட்டின் மன
நிலை எப்படி
புரிந்ததோ?

உடலின் ‘உன்னியை’
அலகால் கொத்தி
எடுக்க

ஒரு வித
சுகமாய் தோளை
குலுக்கும் நண்பன்

ஏனோ
உணர்ச்சியற்ற
பாவனை
காட்டி நிற்கிறது

முகத்தின்
அருகே சிறகை
அடித்து
அதன் சிந்தனையை
கலைத்தும்

உணர்வுகள் ஏதும்
இல்லா
மெளனத்தில்
நிற்கிறது

விடை தெரியா
நிலையில்
விடை
பெற்ற குருவி

மறு நாள்
நண்பனை காண
பறந்து வருகையில்
எல்லாம் புரிந்தது

அடிமாடுகள்
ஏற்றி செல்லும்
கூட்டத்தில்
ஒருவனாய்

கண்கள் உயிர் பயம்
காட்டி நிற்பதை
கண்டது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Mar-22, 12:51 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 300

மேலே