சிவசிவ..!!

அகிலம் போற்றும் ஆண்டவனே
தென்னாடுடைய சிவனே
தேவையெல்லாம் பூர்த்தி செய்பவனே
தெகிட்டாத என் தேவனே..!!

மரணம் வந்து அஞ்சாத நான்
உன் மீது கொண்ட அன்பை நான் எவ்வாறு உரைக்க
தேவைகளை இவ்வளவு இருந்தும்
தெருத்தெருவாய் அலைகிறேன் உன்னை காண..!!

உன்னை வணங்குவதால்
சித்தன் என்றும் பித்தன் என்றும்
அழைக்கிறார்கள் பலர்
அவர்களுக்கு என்ன தெரியும்

என் முதலும் முடிவும் நீயென
ஈசனே உன்னை நினைக்காத
நாளில்லை உன் அருகில் நான் இல்லை
உன்மேல் நான் கொண்ட மயக்கம்
எப்போது தான் தெரியுமோ
என் அப்பன் ஈசனே..!!

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி..!!

எழுதியவர் : (30-Mar-22, 8:13 pm)
பார்வை : 42

மேலே