புத்தக வெளியீட்டு விழா

எழுத்து.காம் தமிழ் வலைதளத்தின் நண்பர்கள்
அனைவருக்கும் இனிய வணக்கம் ..!!

பூவுலகில் சுப்ரமணியம் பாலகிருஷ்ணன் எனும் நான்
எழுத்துலகத்தில் "கோவை சுபா" எனும் புனைப்பெயரில்
1970 ம் ஆண்டு முதல் கதைகள், கவிதைகள் மற்றும்
கட்டுரைகள் எழுதி வருகிறேன். கவிதைகள் எழுதுவதில்
மிகுந்த ஆர்வம்.

நான் எழுதிய கவிதைகளில், சிலவற்றை தேர்வு செய்து,
01 "நிறம் மாறும் மனிதர்கள்"
02 "மாறாத காதல்"
என்ற தலைப்புகளில் இரண்டு புத்தகங்களாக அச்சிட்டு,
அதனை வருகின்ற 07 05 2022 அன்று
கோவையில் எனக்கு R S புரம் மாநகராட்சிப்பள்ளியில்
கல்வி போதித்த ஆசிரியர்களின் முன்னிலையில்,
வெளியீட்டு விழா நடத்தி, புத்தகங்களை வெளீயிடுகிறேன்.

விழா நடைபெறும் இடம்:
JK ஹோட்டல், NSR ரோடு ,
சாய்பாபா காலனி , (SBI எதிரில்)
கோவை . நாள்: 07 .05 .2022 நேரம் மாலை 4 மணி

எனது புத்தகங்கள் கோவையில் கிடைக்கும் இடங்கள் :
விஜயா பதிப்பகம் மற்றும் சப்னா புக் ஹவுஸ்

எழுத்து.காம் வளையதளத்தின் நண்பர்களின்
நல்வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டி
உங்கள் அனைவருடன் தொடர்ந்து
பயணம் செய்ய விரும்பும்
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-May-22, 10:07 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 370

சிறந்த கவிதைகள்

மேலே