பூவுலகின் பேரழகி10

நீ ஏதோ பத்து அழகிகளை வென்று உலக அழகி ஆகவில்லை
நீ வென்ற பத்து பேருமே உலக அழகிகள்

இளைஞர்களை அழவைத்து கண்ணீரைத் திறக்கும் கதவின் கீ இவளிடம்தான் உள்ளது
ஏனென்றால் நீ அழ கி

நீ
கருப்பு நிறம்
சிறப்பு நிறமானது
உன் கூந்தல் சேர்ந்ததால்

நீ கண்ணில் வைக்கும்
மை மையல்ல
அது கருப்பு நிற நெய்

நீ கண்ணில் வைக்கும்
மை மை அல்ல
அது தீண்டாமை

எப்பொழுதும்
என்னை பார்க்காமல்
போகிறாய்
தீண்டாமை ஒரு
பவச் செயல் என்பதை
நீ அறிவாயா


இந்தியாவின் தேசியப் பறவை
மயிலாம்
அது
நீ பிறப்பதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது

மத்திய அரசே
மயில் குயில் முயல்
மூன்றும் சேர்ந்த கயல்
ஒருத்தி இருக்கிறாள்

தேசியப் பறவை யார்
என்ற போட்டியை
மீண்டும் நடத்த வேண்டும்

இல்லையெனில்
டெல்லியில் நடந்த
விவசாயிகள் போராட்டத்தை போல மீண்டும் ஒரு போராட்டத்தை சந்திக்க நேரிடும்

தேவ லோகத்தில் விருது விழா
எல்லோரும் விருது பெற்றார்கள்
அந்த விழாவில் பிரம்மனுக்கு மட்டும் தான் மிகச் சிறந்த படைப்பாளி என்ற விருதை சிவபெருமான் வழங்கினார்

எதற்கு தெரியுமா

உன் போல் ஒரு பேரழகியை
படைத்ததற்காக

உங்க அம்மாவின் பெயர்
அழகம்மாவாகத்தான் இருக்க வேண்டும்
உங்க அப்பாவின் பெயர்
நிச்சயம் அழகப்பனாகதான்
இருக்க வேண்டும்


நிலாவிற்கும்
வேர்ப் பலாவிற்கும்
பிறந்த கலா
இறைவா
விரைவில் என்னோடு
வரவை உலா

எழுதியவர் : Kumar (4-May-22, 11:43 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 236

மேலே