உன் சக்திக்குள்

பெண்ணே...!
நீ நீயாகவே இரு.
உன் சுயத்தை இழந்துவிடாதே.
உன் இளகிய உள்ளம்
கொஞ்சம் இரும்பாகட்டும்.
உன் மெல்லிய உடல்
சற்று வலுவாகட்டும்.
உன் எண்ணத்தில்
உண்மையை புதைத்து வை.
உன் நடையினில்
திண்மையை படைத்து வை.
உன் கனவினில்
மேன்மையை விதைத்து வை.
நீதானே
வீட்டின்....நாட்டின்
முதுகுத் தண்டு.
நிமிர்ந்தே நில்.
எதற்கும் வளையாதே.
வளைந்தால்.... அது
நேர்மைக்காக இருக்கட்டும்.
வீட்டின்
நன்மைக்காக இருக்கட்டும்.
எதற்கும் சமரசம் ஆகாதே..
சரிந்தும் போகாதே.
உன்னால் முடியாதது உலகில்
ஏதாவது உண்டா?
சிவனுக்கு பின்னால்
சக்தி உண்டல்லவா?
அவன் உடலில் பாதி
உன் உரிமையல்லவா?
நல்ல எண்ணங்களை
விதைத்து வை - விளைச்சலை
உன் சந்ததிகள்
அறுவடை செய்யட்டும்.
சிறகை ஒடித்து
சிறைக்குள் இருந்தபோதே - உன்
சக்தி எங்கும் நிறைந்திருந்தது.
இப்போதோ நீ
சிறகை விரித்துவிட்டாய்.
பறந்து போ...
இந்த பிரபஞ்சமே
உன் சக்திக்குள்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-May-22, 8:34 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 1128

மேலே