அரங்கா உந்தன் கண்ணழகு

உன்கண்ணின் அழகைப் பார்க்கத்தான் இறைவன்
எனக்கு கண்கள் தந்தோனோ என்றிருந்தேன்
நான் எப்போதும் அவள் மையலில்
இன்று அரங்கா உந்தன் ஒளிரும்
அழகைக் கண்டுகொண்டேன் தெளிந்தேன்
இப்புவியில் உன்னழகன்றி வேறோர் அழகில்லை
என்பது ஆதலால் அடைக்கலம் எனக்கு
தந்தருள்வாய் கார்முகில் வண்ணா இனி
நீயின்றி எனக்கேது வேறுதுணை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-May-22, 1:53 pm)
பார்வை : 135

மேலே