சபையில் பேசாதே
மெத்தப் படித்தவர்கள்
நிறைந்த சபையிலும்
கல்லாதவர்கள்
நிறைந்த சபையிலும்
நீ கற்றறிந்த பாடங்களை
அரங்கேற்றம்
செய்ய எண்ணாதே ...!!
காரணம் ...
மெத்தப் படித்தவன்
ஏற்றுக் கொள்ளமாட்டான்
கல்லாதவனுக்கு
நீ சொல்வது புரியாது
சபையில்
நீ பேசாமல் இருப்பதே
உனக்கு சிறப்பு ...!!
--கோவை சுபா