உன் விரல் பிடித்து பேச வேண்டும் 555
***உன் விரல் பிடித்து பேச வேண்டும் 555 ***
என்னுயிரே...
நீ என்னோடு
பேசும் போதும்...
மெளனமாக சிரிக்கும்
போதும் ரசிக்கிறேன்...
உன் மௌன புன்னகையில்
மெல்ல மெல்ல இழக்கிறேன்...
என்னை உன் காதல்
என்னும் விலங்கால்...
கைது செய்துவிட்டாய்
உன் இதயத்தில்...
பூ உனக்கு
பூமாலை சூட ஆசை...
நான்
உன்னை நேசிக்கிறேன்...
நான் மறைந்தாலும் என்
எழுத்துக்களும் உன்னை நேசிக்கும்...
நடக்கையில் உன்னை
அணைத்தபடி நடக்க வேண்டும்...
உன் விரல் பிடித்து பேச வேண்டும்...
நீ உதடு
சுழிக்கும் போதெல்லாம்...
உன் இதழ்களை
கடிக்க ஆசைதான்...
உன் உதட்டின் ரேகைகளோ
வேண்டாம் என்று கெஞ்சுகிறது...
மிஞ்சி
கடிக்க ஆசைதான்...
உனக்கு
வலித்துவிடுமோ அஞ்சுகிறேன்...
நீ கண்மூடி கொடுக்கும்
அன்பு முத்தத்திற்காக...
புதியதாய்
இன்னொருமுறை பிறக்க ஆசை...
என்னையே
நான் தொலைத்தாலும்...
உயிரே உன்னை
தொலைக்க மாட்டேன் என்றும்.....
***முதல்பூ.பெ .மணி.....***