உன் கோபம் என்று குறையுமோ 555
***உன் கோபம் என்று குறையுமோ 555 ***
என் சகியே...
நீயும் நானும் காதலை சொல்லி
நாம் சந்தித்த முதல் சந்திப்பு...
நினைவிருக்கா
அந்த அழகியநாள்...
சேர்ந்து நடக்கையில் என்னை
உரசி பார்க்கும் உன் துப்பட்டா...
வானில் பறந்தேன்
அப்போதெல்லாம் என்னை மறந்து...
எவ்வளவு கோபம்
உன்மீது கொண்டாலும்...
என்னை களவாடிய உன்
கண்களை பார்க்கும் போது...
கோபவார்த்தைகள்கூட
சிரிப்பாக மாறுதடி...
நான்
சிரிக்கும் போதெல்லாம்...
அதிகமாக அழகாக கோபம்
கொள்கிறாய் என்மீது...
முதல் சந்திப்பில் நான்
எதிர்பார்க்காத நேரம்...
நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்...
என் கன்னத்தில்
இன்னும் கூசுதடி...
மேகங்கள்
களைந்து சென்று...
மீண்டும் சேரும்
போது எத்தனை அழகு...
நீ கோபம் கொண்டு
மீண்டும் பேசும் போது...
எத்தனை அழகு
அந்த மொழிகளில்...
என் வாழ்க்கை என்னும் புத்தகத்தை
நான் ரசிக்க ஆரமித்ததே...
நீ என் வாழ்வில்
வந்த பிறகுதானடி...
பொக்கிஷமாக
கிடைத்த உன்னை...
தொலைக்க
மனமில்லடி எனக்கு...
உன் கோபம் குறைந்து
எப்போது பேசுவாய் நீ என்னுடன்....
***முதல்பூ.பெ.மணி.....***