ஒரு தலைக் காதல்

பெண்ணே!
உன் கூந்தலில் இருக்கும்
பூச்சரத்தில் மீது கூட
எனக்கு பொறாமை தான் ....
அதனைப் போல்
ஒரு நாள் கூட
என்னால்
உன்னோடு
சேர்ந்து இருக்க
முடியவில்லை என்று தான்....!

உன் காலில் இருக்கும்
காலனி மீது கூட
எனக்கு பொறாமை தான் ....
அதனை போல்
சிறிது காலம் கூட
என்னால்
உனக்காக
சேவை செய்ய
முடியவில்லையே என்று தான் .....!

உன் வீட்டு
நாய் மீது கூட
எனக்கு பொறாமை தான்.... உன்னிடமிருந்து
அதைப் பெற்ற
சிறிதளவு அனபைக் கூட
என்னால் பெற முடியாமல்
போய்விட்டதே! என்று தான் .....

உன் முகத்தில் இருக்கும்
மச்சத்தின் மீது கூட
எனக்கு பொறாமை தான்
அதனை போல்
உன் இதயத்தில்
புள்ளி அளவுகூட
எனக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டதே என்று தான் .....!

உன் வீட்டில் உள்ள
கண்ணாடி மீது கூட
எனக்கு பொறாமை தான்
அதனை போல்
அன்றாடம்
உன் முகத்தை
என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று தான் .....!

உன் கையிலுள்ள
கடிகாரத்தின் மீது கூட
எனக்கு
பொறாமை தான்
ஒரு நாளைக்கு
ஒரு சில நொடிகள்
அதன் மீது
நீ செலுத்தும்
பார்வையை கூட
என் மீது
செலுத்தாமல்
சென்று விட்டாயே என்று தான் ...!

மண் மீது கூட
எனக்கு பொறாமை தான் .....
அது
உன் காலடியில்
சுமக்கும் பாக்கியத்தை
பெற்றது போல்
என்னால்
பெற முடியவில்லையே என்று தான்.....!!!

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-Jul-22, 10:08 pm)
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 44

மேலே