தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின் நலம் – அறநெறிச்சாரம் 141

நேரிசை வெண்பா

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை - தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு. 141

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சாட்சியாக வைத்து ஒருவன் அடக்கமாக இருந்து வாழ்ந்து வருவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்திலும் இல்லை.

தன்னைத் தன் பிறந்த குடிப்பெருமையைக் கெடுக்கின்ற தீய நெஞ்சின் சொல் கேட்டு அதன்படி தொண்டு செய்து நடப்பது, பார்வை விலங்காக நிறுத்தப் பெற்ற பெண் யானையை விரும்பி பொறியில் அகப்பட்ட களிறே போல் எப்பொழுதும் வருந்துதற்குக் காரணமாகும்.

குறிப்பு:

களிறு - ஆண் யானை; பிடி - பெண் யானை. குறுமை + ஏவல் = குற்றேவல்; எளிய வேலைகள்.
கரி - சான்று, சாட்சி.

குறி:
1. Mark, sign, stamp, emblem, token, symbol, indication, designation - அடையாளம். (பிங்)
2. Aim, mark to shoot at - இலக்கு. கூரிய குணத்தார் குறிநின்றவன் (தேவா. 356, 3)
3. Secret appointment by lovers, tryst - குறியிடம். (தொல். பொ.130)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jul-22, 5:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே