செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும் நல்குவார் கட்டே நசை – நாலடியார் 263
இன்னிசை வெண்பா
மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை 263
- நன்னெறியில் செல்வம், நாலடியார்
பொருளுரை:
பலவாக நிறைந்த அலைகளை உடைய கடற்கரையில் தாம் தங்கியிருந்தாலும் வலிதின் நீருறுதலுடைய உவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர் பருகுவர்;
கீழ்மக்கள் அருகாமையே செல்வம் மிக உடையவராயினும், தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவு சென்றும் உதவுவார் கண்ணதேயாகும்.
கருத்து:
செல்வமுடையோர் கீழோராயின், தக்கோர்க்கு அது பயன்படுதலில்லை.
விளக்கம்:
கடலில் இயல்பாக மிக்க நீரிருத்தல் போலின்றிக் கிணற்றிற் சிறுகச் சிறுக முயற்சியோடு நீர் வந்து கூடுதலின். ‘வல்லூற்றுக்கிணறு' எனப்பட்டது;
இயல்பாகப் பெருஞ்செல்வம் பெற்றிருத்தலின்றித் தாமே தம் முயற்சியாற் சிறுகச் சிறுகப் பொருளீட்டும் நிலையினராயினும், அவர் நல்குவோராயின் அவரிடமே தக்கோர் உள்ளஞ் செல்லுமென்பது கருத்து.
நல்குவாரென்றார், நல்கும் பேரினிமைக் குணமுடையாரென்றற்கு; உண்பரென்றது பொதுவினை,