ஆகா! காதல் கவிதை...
💙💞💙💞💙💞💙💞💙💞💙💞
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💙💞💙💞💙💞💙💞💙💞💙
பெண்ணே!
பசித்தவனுக்குக்
கிடைத்த உணவாய்.
படித்தவனுக்குக்
கிடைத்த வேலையாய்
ஏழைக்குக்
கிடைத்த பணமாய்
அநாதைக்குக்
கிடைத்த உறவாய்
மலடிக்குக்
கிடைத்த குழந்தையாய்
குருடனுக்குக்
கிடைத்தக் கைத்தடியாய்
முயற்சித்தவனுக்குக்
கிடைத்த வெற்றியாய்
பாடுபட்டவனுக்குக்
கிடைத்த ஊதியமாய்...
பெண்ணே !
நீ எனக்கு கிடைத்தாய்....!!!
💖💖💖💖💖💖💖💖💖💖💖
கடல் என்றால்
அதில் அலையுண்டு...
உடல் என்றால்
அதில் ஊண் உண்டு...
வானவில் என்றால்
அதில் வளைவுண்டு
வானம் என்றால்
அதில் மேகம் உண்டு
தேனென்றால்
அதில் சுவையுண்டு
தென்றல் என்றால்
அதில் சுகமுண்டு
மரம் என்றால்
அதில் வேர் உண்டு
நிறம் என்றால்
அதில் வண்ணம் உண்டு....
மழை என்றால்
அதில் நீர் உண்டு
பெண்ணே ! நான் என்றால்
அதில் நீ உண்டு....!
💖💖💖💖💖💖💖💖💖💖💖
பேரன்பே !
நீ என்னிடம்
சொன்னதை
நிறைவேற்ற
முடியாமல்
அணு அணுவாய்
செத்துக் கொண்டு
உள்ளேன் .....
ஆம் ....!
நீ என்னிடம்
இறந்து விடு என்று
சொல்லி
இருந்தால் கூட
பரவாயில்லை
மறந்துவிடு என்றல்லவா
சொல்லிவிட்டாய்
நான் என்ன செய்வேன்....?
*கவிதை ரசிகன் குமரேசன்*
💙💞💙💞💙💞💙💞💙💞💙