காதல்
கல்லும் கனிந்தால்தான் சிற்பிக்கும்
கல்லில் கலை வண்ணம் காணமுடியும்
கறவைப் பசுவும் இசைந்தால் அன்றி
கறப்பவன் கலம் ஏந்தி இருந்தும்
பயன் ஏதும் இல்லையே -அதனால்
காதல் காதல் என்று வீணே
பெண்ணின் பின்னே அலைதல் வீணே
பெண் இசைந்தால்தான் காதல் மலரும்