வாதம் நீக்கும் பொருட்கள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செங்கழு நீர்கோஷ்டந் தேன்மிளகு நல்லெண்ணெய்
தங்குபெருங் காயந் தழுதாழை - எங்கெங்கும்
கூட்டுசிறு முத்துநெய் கோதில் உளுந்திவைகள்
வாட்டுமனி லத்தை மதி

- பதார்த்த குண சிந்தாமணி

- பொருஉரை::

செங்கழுநீர்க்கிழங்கு, கோட்டம், குறிஞ்சித்தேன், மிளகு, எள்ளெண்ணெய், பெருங்காயம், தழுதாழை இலை , சிற்றாமணக்கெண்ணெய், உளுந்து ஆகியவை வாதநோயினைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-22, 12:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே