காலையில் சிலம்பம் - மல்யுத்தம் செய்தல் - குதிரையேற்றம் - பாத நடை - இவைகள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சிலம்பமுதல் மல்யுத்தந் தேசிநடை கொள்ளிற்
பலம்பரவு மெய்யிறுகும் பன்னத் - துலங்குபசி
யுண்டாங் கபவாத மோடுவலி சூலையும்போம்
பண்டா மலம்இறங்கும் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

காலையில் சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், நடை இவற்றைச் செய்வதால் பலமுண்டாகும். உடல் வன்மையுறும். பசியுண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-23, 9:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே