இயற்கையின் கோபம்

இயற்கையின் கோபம்

இமயமலை
அழகின் வாசல்கள்
ஆழ புதைந்து
கொண்டிருக்கிறது

மலையின் தலையில்
தட்டும்
மனித எந்திரங்களின்
மூர்க்கமோ

நிலத்தை துளைத்து
செல்லும்
எண்ணற்ற குகை
பாதைகளோ

மின்சாரம் வேண்டி
ஓடும் நீரை
தேக்கி
அழுத்தும்
நீர் விசையோ

எத்தனை துன்பங்களை
இயற்கை
பொறுத்து கொள்ள
முடியும்

இருந்தால்தானே
மனிதனின்
சுரண்டலும்
கறண்டலும்

முடிவை எடுத்த
இமயத்தின்
இயற்கை வாயில்
உத்ரகாண்ட் ஜோஷிபூர்

இங்கே தன்னை
ஆழ புதைத்து
கொண்டிருக்கிறது.

ஆட்டி படைத்த
மக்களாகிய நாம்
வீடு வாசலை
இழந்து அச்சத்தில்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Jan-23, 4:27 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iyarkaiyin kopam
பார்வை : 175

மேலே