நன்றிகள்- என் வாழ்வு ஒரு அரசியல்
ஏன் இந்த கோபம்?
இந்த" கோபம் மட்டும் தான் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படியானால் கோபத்தில் பல வகைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தேன்.
ஆம் ! அப்படித்தான் போலும். எப்படி கோபம் இடத்திற்கு , சம்பவத்திற்கு, நிகழ்வுக்கு என மாறுபடும் என்பதை ஆராயத் தொடங்கினேன்.
இடம் , பொருள், ஏவல் என்றார்கள் நம் முன்னோர்கள்.
" இடம்" அறிந்து பேசி, பொருள்பட உரைத்து, வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் பண்பு நம் தமிழர் பண்பு !
நம்முடைய கோபம் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் பட்சத்தில், அது நம்மை பெரிதும் பாதிக்காது.
அந்த சம்பவத்தை மாற்றி அமைக்க , அல்லது கடந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் புத்திசாலித்தனம் மட்டும் இருந்தால் போதுமானது.
அடுத்து நிகழ்வு :-
ரொம்பவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாள
வேண்டும்.
அப்படி செய்யாமல் கொஞ்சம் அவசரப் படும் போது ,
'தலை பாய்' க்கு வருவதை 'தலைக்கு' கொண்டு வந்து விடும்.
ஆக ! கோபத்தை எப்படித் தான் கையாள்வது?
'ஆள்வது' என்பது முடியாத காரியம். ஆகவே அதைக் கடக்க வேண்டும்.
அவ்வாறு 'கடக்க வேண்டும்' என்றால் ,"மனதை" கொஞ்சம் ஏமாற்றினால் போதும்.
மனதை ஏமாற்றக் கற்றுக்கொள்பவன் இந்த உலகத்தையே ஆள்வான்.
அவன் தன்னைப் போல் பிறரையும் ஏமாற்றக் கற்றுக்கொண்டு பிறகு அந்த "சூட்சமத்தில் " நின்று , திளைத்து , கடைசியாக நிதானமாக வெளியே வந்து விடுவான்.
உதாரணங்கள் - அரசியல் வாதிகள்.
ஆக நாம் வாழ நம்மை கொஞ்சம் " அசுவாசப்படுத்திக்" கொள்வோம்.
பிறரைப் பற்றி காலம் நமக்கு புரிய வைக்கும்.
அரசியல் பழக வேண்டும். படிப்பது என்பது "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது".
வாழ்க வளமுடன்-மனமே மார்க்கம்.
நன்றிகள்- என் வாழ்வு ஒரு அரசியல்.