பொன்னிறக் கூந்தலாள் காதலில் தோளினில் சாய்ந்தாய்

மென்னலை பாய்ந்திடும் தேம்ஸ்வெண் நதிக்கரையில்
பொன்னந்தி மாலையில் காத்திருந்தான் காதலன்
பொன்னிறக் கூந்தலாள் வந்தமர்ந்தாய் காதலில்
புன்னகையில் தோளினில்சாய்ந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-23, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே