❤️தேவதை வருகிறாள் ❤️

சித்திரை மாத கத்திரி
வெயில் உச்சமாய் உமிழும்
நன்பகல் நேரம் - சாலையோரம்
வியர்வை குளியலில் நான்,
வினாடியில் பளீரென மின்னல்
விழிகளோ இருளின் பிடியில்!

விழிப் பார்வை விடுபட்டதோ
என்று இதயப் படபடப்புமிக,
கசக்கி விரித்தேன் விழிகளை
ஓ!!!!!!!! யென் தேவதை வருகிறாள் ❤️

எழுதியவர் : கவிபாரதீ (26-Mar-23, 9:08 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 337

மேலே