வழி காட்டியது
பத்து முறை விழுந்தது
பாவமுமல்ல, பரிதாபமுமல்ல
ஒன்பது முறை எழுந்தது தான்
உயர்வு தரும் என்பதை
நெஞ்சில் நிறுத்தி
செயல் பட்டால் நிச்சயம்
வெற்றி கிடைக்கும்
என்பது தன்னம்பிக்கை
மனிதனுக்குக் கைகள் மூன்று,
மூன்றாவது கை தான்
தன்னம்பிக்கை,
தளராத உள்ளங்களுக்கு
தெய்வம் அருளியது
துணிந்து நிற்போருக்கு
துணையாக நின்று
வெற்றிக்கு வழி காட்டியது