எங்கே எனது கவிதைகள்..

எங்கே எனது
கவிதை தேடுகிறேன்..

கனவிலும் நினைவிலும்
வடித்ததைப் பார்க்கிறேன்..

கண்ணுக்குப் புலப்படாமல்
மறைந்துக் கிடக்கிறதே..

அவளை நினைத்து
அழுதது எழுதுகோல்களே..

வெற்றுக் காகிதத்தில் எழுத்துக்களாக கவிதைகளே..2

கண்ணீர்த் துளிகளாக
என் புலம்பல்கள்..

எழுதிய வைத்த
சொற்களைக் காணவில்லையே..

இன்னமும் அலைந்துத் திரிகிறேன் மண்ணிலே..

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (27-May-23, 9:23 pm)
பார்வை : 33

மேலே