போராடுநீபோராடு
போராடு..நீ..போராடு
=================
அகிம்சை வழியில்
அமைதிப் போராட்டம்
ஊகித்தப்படியே வெளியேறினான்
ஊரைவிட்டு வெள்ளையனுமே..
அடிக்கு அடியென
அடியெடுத்த பெரும்படையோடு
அடித்தே விரட்டினார்
அந்நியரை நேதாஜியே
விடுதலை கவிபாட
விழித்தெழுந்த பாரதத்தினர்
படுகொலைக்கு அஞ்சாது
பாடும்பட்டனரே சுதந்திரத்திற்கே
சல்லிக்கட்டு போராட்டாம்
சாதனையான வரலாறும்
அல்லியாக மலர்ந்தது
அறவழியில் வீரவிளையாட்டே
உலையிட்ட இரும்பை
உதைத்திட உருமாறும்
தலையிட்டு போராட
தேவையானவை கிடைத்திடுமே
சமத்துவ புறா ஞான.அ.பாக்யராஜ்