சொல்லுவோம்

ஒளி வடிவில் பூமிக்கு
வந்து போன சூரியனை
வணங்கி துதித்தோம்
வாழவைத்த தெய்வமென்று

சுடர் தரும் சூரியன் தான்
சுட்டெரிக்கும் வெப்பத்தால்
சனங்களைக் கொன்று
சாலைகளில் வீசியதும்

மேகத்தை உருவாக்கி
மழை,வெள்ளமென மாற்றி
வீடுகளில் புகுந்து—மக்கள்
உயிரை பறித்து அழித்தால்

சூரியன் காப்பவனா?-இல்லை
அழிப்பவனா?
இறைவனென உயர்த்துவதேன்?
இயற்கையென்றே சொல்லுவோம்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Jul-23, 3:32 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 28

மேலே