காலம் நகரும்போது

காலம் நகரும்போது.

ரோஜா பூக்கள்..
ரோஜா பூக்கள் தான்
அவைகள் வாடாத வரை

நண்பர்கள் ....
நண்பர்கள் தான்
சிலர் இந்த ரோஜாப்
பூக்கள் போல்.....?
அதில் சிலரோ வானத்து
நட்சத்திரம் போல்.

வளரும் போது
பல முகங்களை பார்க்கிறோம்
அவற்றில் பலரை
மறந்து விடுகிறோம்

சின்னஞ்சிறு குழந்தை முதல்
சிறு பையன் வரை...
எத்தனை மாமாக்கள்
எத்தனை அத்தைகள்
எத்தளை முத்தங்கள்
சிலவற்றை நாம் நினைவில் கொள்வோம்
பலவற்றை நாம் மறந்து விடுவோம்.

ஆண்டு 1, ஆண்டு 2... பள்ளியில்...
ஒன்றாக விளையாடினோம்,
ஒன்றாக சிரித்தோம்
எத்தனை ஞாபகம் இருக்கிறது
எத்தனை பேர் நம்மை நினைவில் கொள்வார்கள்?

வேலையில்...... பல சகாக்கள்
எத்தனை பாட்டில்கள் காலியாயின.....?
இப்போது எவர்களை பார்க்கிறோம்.

மனைவி பிள்ளைகள்
வளர்ந்து வெளியேறுகின்றனர்
எங்களை தனியாக விட்டுவிட்டு.

இறுதியாக?
ஆன்மா எதையும் தேடுவதில்லை
இறைவனை தவிர

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (8-Jul-23, 9:45 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 113

மேலே