கையை நக்கிட்டே இருக்கிறான்

ஏண்டா சின்னத் தம்பி, உம் பேரனோட பேரு என்னடா?
@@@@@@
அஞ்சு பேரனுக இருக்கிறாங்க. யாரோட பேரைக் கேட்கிறீங்க பெரியம்மா?
@@@@@@
அஞ்சு பேரும் எனக்குத் தெரியாது. அங்க பாரு ஒருத்தன் நிக்கறானே அவனும் உன்ற பேரந்தாண்டா? சும்மா, சும்மா கையை நக்கிட்டு இருக்கிறானே அவன் பேரைச் சொல்லுடா சின்னத் தம்பி.
@@@@@@@
அவனா? அவன் பேரு நக்குல் (நகுல்).
@@@@@@
'நக்குல்'னு பேரு வச்சதானாலயோ என்னவோ சும்மா, சும்மா கையை நக்கிட்டே இருக்கிறான்.
@@@@@@@@
அது அவன் பேரு இராசிப்படியா இருக்குதோ என்னவோ! நான் என்னத்தக் கண்டேன் பெரியம்மா.
@@@@@@@
ஆமாண்டா சின்னத் தம்பி. நீ சொல்லறது சரியா இருக்கும்டா.

எழுதியவர் : மலர் (2-Aug-23, 7:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 83

மேலே