உன்னழகு
எல்லாம் அளந்து விடலாம் என்றிருந்தேன்
வல்லவனாய் என்னை நினைத்து மாவலிபோல்
உன்னைக் கண்டபின்னே உன்னெழிலை இங்கு
அளப்பற்கரிய பொருளாய் கண்ட பின்னே
என் ஆணவம் ஒழிந்தது அறவே