மரணம் சொல்லாதது வேதமும் இல்லை

மரணத்தைப்போல் ஒரு மாமருந்தில்லை
மரணத்தைப்போல் ஒரு போகமும் இல்லை
மரணத்தைப்போல் ஒரு யாகமும் இல்லை
மரணத்தைப்போல் ஒரு பேரின்பம் இல்லை

ஜனனமும் மரணமும் நம் வசம் இல்லை
ஜனனத்தினால் வரும் வாழ்வினில் தொல்லை
ஜனனத்தின் பின் வாழ்க்கை ஒரு சிலந்திவலை
மரணத்தினால் வரும் பெரும் விடுதலை

மரணத்தைப் படிக்க உயிர் இருப்பதில்லை
மரணத்தை உணர உணர்வுகளும் இல்லை
மரணத்தை புரிந்துகொள்ள புலனொன்றும் இல்லை
மரணம் சொல்லாதது வேதமும் இல்லை

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Sep-23, 5:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 143

புதிய படைப்புகள்

மேலே