மாதுளை முத்தை சிந்தும் மௌனப் புன்னகை
மாதுளைமுத் தைசிந்தும் மௌனப் புன்னகை
காதலை கண்ணின் கயலால் எழுதினாய்
நீதி செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல் கண்ணீர் கவிதை ஆனது
---எதுகை மோனையுடன் பல வாய்ப்பாட்டால்
அமைந்த கலிவிருத்தம்
மாதுளைமுத் தைசிந்தும் மௌனமென் புன்னகை
காதலை கண்ணின் கயலால் எழுதினாய்
நீதியைச் செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல்கண் ணீரான தே
மாதுளைமுத் தைசிந்தும் மௌனமென் புன்னகை
காதலை கண்ணினில் தந்தாய்நீ --பேதையே
நீதியைச் செய்யவில்லை நின்காத லுக்கிங்கு
காதல்கண் ணீரான தே
----கவிதை இன்னிசை நேரிசை வெண்பா வடிவில்