காதலர் திருவிழா தொடங்குது

மஞ்சள்நிலா மாலையில் வந்து
நெஞ்சில் ஓவியம் வரையுது
மலர்களை வருடும் தென்றல்
காதில் வந்து ஏதோ சொல்லுது
மௌன விழியாள் வருகையை
தூது சொல்லி செல்லுது
ஆதவனும் அந்தி வானில் விடைபெற
காதலர் திருவிழா தொடங்குது

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-23, 8:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே