நாலாயிரங்கோடி எங்கே

சுயநலம்


நேரிசை வெண்பா

நாட்டின் மழைவடிய நாலாயி ரங்கோடி
நாடுதந்தும் செய்தனர் நாசவேலை --- பாடு
படாகொள்ளை செய்ததை பாரும் அறியா
விடாமழை காட்டும் விடு


கயவர் திராவிடர் கற்றாரில் லையே
பயனில் விரட்டநன்மை பாரு

சுயச்சேவை செய்துமே சேர்த்தசொத்தை சொந்தம்
பயனுறவே பார்த்து மகிழ்வர் -- கயமை
அரசினை ஆடை அகற்றியே ஓடத்
துரத்தியுமிழ் காரியேத்தூ தூ

நரியதற்கு நாட்டாமை நாம்கொடுக்க நாட்டை
பெரிதாய ழித்துப் பெருத்தார் -- பெருத்தவர்
பர்வதமாய் மக்கள் பனியுறைந்து சாகவிட்டார்
கர்வங்கொண் டாரழிவர் காண்

எழுதியவர் : பழனி ராஜன் (8-Dec-23, 10:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 95

மேலே