தேனிசை யால் பாடிவளை நற்பூக்களின் மாலையிலே

வானமே நீதேடும் வெண்ணிலா இங்கே இதோஇவளோ
தேனருந் தும்வண்டே தேடிடும் பூஇவள் பார்த்திடுநீ
கான அமுதைப் பொழியும் குயிலே இளவேனிலில்
தேனிசை யால்பா டிவளைநற் பூக்களின் மாலையிலே
================================================================
அலகிடுவோம்
வானமே நீதேடும் வெண்ணிலா இங்கே இதோஇவளோ 16
நேர் நிரை / நேர் நேர் நேர் / நேர் நிரை / நேர் நேர் / நிரை நிரை நேர்
கூவிளம் தேமாங்காய் கூவிளம் தேமா கரு விளங்காய்
தேனருந் தும்வண்டே தேடிடும் பூஇவள் பார்த்திடுநீ 16
நேர் நிரை / நேர் நேர் நேர் / நேர் நிரை நேர் நிரை / நேர் நிரை நேர்
கூவிளம் தேமாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கான அமுதைப் பொழியும் குயிலே இளவேனிலில் 16
நேர் நேர் / நிரை நேர் நிரை நேர் / நிரை நேர் / நிரை நேர் நிரை
தேமா புளிமா புளிமா புளிமா புளிமாங்கனி
தேனிசை யால்பா டிவளைநற் பூக்களின் மாலையிலே 16
நேர் நிரை / நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நிரை
கூவிளம் தேமா புளிமா கூவிளம் தேமாங்கனி
---ஐஞ்சீர் நெடிலடி நான்கு , ஈற்றுச் சீர்கள் விளங்காய் அல்லது மாங்கனி ஏற்ற
இடைசீர்கள் வெண்டளை கொண்டு ஈற்றுச் சீர் ஆசிரிய ஏ கார ஓசை பெற்று
ஒரே எதுகை மூன்றாம் சீர் மோனைப் பொலிவுடன் அத்துடன்
நேரசையில் தொடங்கிய அடிகளில் நான்கும் ஒற்று நீக்கி
I6 எழுத்துக்களுடன் அமைந்த கட்டளைக் கலித்துறை எனும் பாவினம்